கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் சிங்கப்பூர் வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது, இது அவர்களின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் வருவது குறித்த தகவலை ஸ்போர்ட்ஸ்கீடா (Sportskeeda) தெரிவித்துள்ளது.
38 வயதான அவர், பலமுறை சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளார். மீண்டும் வரும் ஜூன் தொடக்கத்தில் மற்றும் நடுப்பகுதியில் அவர் வருவார் என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அவர் இங்கு வருவது சிங்கப்பூரில் அவருடைய ரசிகர்களுக்கு பெரும் இன்பத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.
அதே போல சிங்கப்பூரிலுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் பெரும்பாலும் அவருடைய ரசிகர்கள் தான்.
அவரின் வருகைக்காக காத்திருப்பதாக ஊழியர்கள் தங்கள் facebook பதிவுகளில் கூறி வருகின்றனர்.