Cristiano Ronaldo in Singapore: கால்பந்து சூப்பர்ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளார்.
ரொனால்டோ சிங்கப்பூருக்கு வருகை தர உள்ளார் என்ற செய்தியை நாம் முன்னர் வெளியிட்டோர். இந்நிலையில், அவர் வருகை தந்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளார்.
சிங்கப்பூரில் கடுமையாகும் சட்டம் – ஜூன் முதல் அமல்: மீறினால் 30 ஆண்டுகள் சிறை, 15 பிரம்படி
அவர் தாவரவியல் பூங்காவிற்கு வாகனத்தில் வருகை தந்தபோது, ரசிகர்கள் ஆர்ப்பரித்து அவரைச் சூழ்ந்தனர்.
அதில் ஒரு சில அதிர்ஷ்டசாலிகள் தங்கள் ஜெர்சியில் ஆட்டோகிராப் வாங்கியும் மகிழ்ந்தனர்.
“சிங்கப்பூருக்கு மீண்டும் வந்ததில் பெரும் மகிழ்ச்சி” என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.
தனது நீண்டகால நண்பரான பீட்டர் லிம் என்பவரால் நிறுவப்பட்ட இளைஞர்களுக்கான உதவித்தொகைக்கு (scholarships) ஆதரவை வழங்க அவர் சிங்கப்பூர் வந்துள்ளார்.
இந்த உதவித்தொகை மூலம் பயன்பெறும் சுமார் 200 பேரிடம் ரொனால்டோ உரையாடுவார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் சிங்கப்பூரில் உள்ள இளைஞர்களை அவர் சந்திக்க உள்ளார்.
இதற்கு முன்னர் பலமுறை அவர் சிங்கப்பூர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்