நீரில் மூழ்கி இறந்ததாக நம்பப்படும் சிறுவனின் உடலை சுமார் 1.5 கிமீ தொலைவு வரை சுமந்து வந்த முதலையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தனது நான்கு வயது மகனை இழந்து தவித்த இந்தோனேசிய குடும்பத்துக்கு ராட்சத முதலை ஒன்று உதவியது அனைவரையும் சோகம் கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், கிழக்கு கலிமந்தன் வட்டாரத்தில் உள்ள மஹாகம் ஆற்றின் குறுக்கே நீந்திக் கொண்டிருக்கும் முதலை, தலைக்கு மேல் குழந்தையின் உடலை நேர்த்தியாக சுமந்து செல்வதைக் காணலாம்.
Strange but true…
A huge crocodile appears with the body of a drowned child on its back & hands it over. The family had failed to find it from a the crocodile infested river in Indonesia.
VC:Gulf Today pic.twitter.com/HDSuKezRSh— Susanta Nanda IFS (@susantananda3) January 24, 2023
மீட்புப் படகின் அருகே வந்து சிறுவனின் உடலை வீரர்களிடம் ஒப்படைத்த முதலையை கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்தனர்.
Detik செய்திகளின்படி, முதலை தோராயமாக 1.5km தூரம் சிறுவனின் உடலை சுமந்து சென்றதாக நம்பப்படுகிறது.
முஹம்மது ஜியாத் விஜயா என்ற சிறுவன் இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.