தன்னை தானே வைத்து பூட்டிக்கொண்ட பெண்… பத்திரமாக மீட்டு கைது செய்த போலீஸ்

DART officers rescue woman arrest
Stomp

பிளாக் 350 Anchorvale சாலையில் உள்ள அடுக்குமாடி வீட்டில் தன்னைப் பூட்டிக் கொண்ட 61 வயது பெண் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டார்.

கடந்த பிப்ரவரி 17 அன்று மாலை 4.25 மணிக்கு நடந்த இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்களை எடுத்தால், சிங்கப்பூர் ஊழியர்களுக்கு S$1,400 சம்பளம் – அனைத்து நிறுவனங்களுக்கும் கட்டாயம்!

காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​​​61 வயதான பெண் ஒருவர் அந்த இடத்தில் உள்ள குடியிருப்பில் தன்னை தானே பூட்டிக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தப் பெண் தனக்கு தானே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, சிறப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் SCDFஅதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பாதுகாப்பு “லைஃப் ஏர் பேக்” பயன்படுத்தப்பட்டது.

அதன் பின்னர், இறுதியாக மாலை 6.08 மணியளவில், காவல் துறையினர் வீட்டுக்குள் நுழைந்து அவரை காப்பாற்றி, மனநலச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் அப்பெண்ணுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

தங்கும் விடுதி, கட்டுமான துறையில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் இது கட்டாயம்!