ஹூகாங்கில் உள்ள ப்ளோரிடா காண்டோமினியம் வளாகத்தில் 26 வயதுடைய ஆண் ஒருவர் ஜூலை 13ஆம் தேதி காலை இறந்து கிடந்தார்.
புளோரிடா காண்டோமினியத்தின் வளாகத்தில் அமைந்துள்ள பிளாக் 76 இன் இரண்டாவது மட்டத்தில் அந்த நபர் அசைவில்லாமல் கிடந்தார் என குடியிருப்பபாளர் ஒருவர் கூறியுள்ளார். அவர் ஜூலை 13 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் அவர் தூங்கிக் கொண்டிருந்த போது தனக்கு பலத்த சத்தம் கேட்டதாக கூறியுள்ளார். எட்டாவது மாடியில் உள்ள தனக்கு கேட்டதாக அவர் கூறியுள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் படுக்கைக்குச் சென்ற அவர், காலை 7 மணியளவில் மீண்டும் எழுந்தபோது, தரையில் கிடந்த ஒரு உடலைச் சுற்றி இரத்தம் தேங்கியிருப்பதை கண்டார். மற்ற குடியிருப்பாளர்கள் எடுத்த புகைப்படங்கலைப் பார்த்ததில் வெறுங்காலுடன் ஒரு மனிதன் தரையில் கிடப்பதாகக் கூறியுள்ளார். மேலும் அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 13 காலை 6:53 மணிக்கு 76 ஹூகாங் அவென்யூ 7 இல் உதவிக்கான அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் காவல் படை (SPF) தெரிவித்துள்ளது. வந்தவுடன் 26 வயதுடைய நபர் அசையாமல் கிடப்பதை காவல்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர், மேலும் துணை மருத்துவர்கள் அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவித்தனர். விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சிங்கப்பூர் காவல் படை கூறியுள்ளது.