குடியிருப்பில் பல நாட்களாக வீசிய துர்நாற்றம்: அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு

decomposing-man-toa-payoh
Lianhe Zaobao

தோ பாயோவில் உள்ள பொது குடியிருப்பு வீட்டில், டிச. 26 அன்று அழுகிய நிலையில் ஆணின் சடலம் ஒன்று போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜாங் யூ டோங் என்ற அந்த ஆடவருக்கு 63 வயது என சீன நாளிதழ் ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

லாரி மூலம் போதைப்பொருள் கடத்தல்: வளைத்து பிடித்த ICA – 24 வயது வெளிநாட்டு ஓட்டுநர் கைது

சீன செய்தித்தாளிடம் பேசிய இறந்தவரின் பக்கத்து வீட்டுக்காரர் கூறியதாவது: தங்கள் குடியிருப்பில் பல நாட்களாக துர்நாற்றம் வீசியதாகவும், இதனை தாங்க முடியாமல் அவரது கணவர் காவல்துறையை அழைத்ததாகவும் கூறினார்.

இதனை அடுத்து, அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள், பிளாக் 100 லோரோங் 1 தோ பாயோவில் அமைந்துள்ள அவரது வீட்டில் இறந்தவரின் எஞ்சிய உடல் பாகங்களை கண்டறிந்தனர்.

டிசம்பர் 26 அன்று பிற்பகல் 2:57 மணிக்கு, இயற்கைக்கு மாறான இந்த மரணம் குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இதில் ஏதும் சதிச்செயல் நடந்ததாக சந்தேகிக்கவில்லை என்றும், விசாரணைகள் நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பணத்தை திருடியதாக பெட்ரோல் நிலையத்தில் பணிபுரிந்த ஊழியருக்கு சிறை