நெருங்கும் தீபாவளி…..சென்னை- சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை….விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டிக்கெட் முன்பதிவு!

Photo: Air India Express Official Twitter Page

 

தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், சிங்கப்பூர் வாழ் தமிழர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வரும் நிலையில், சென்னை- சிங்கப்பூர் இடையிலான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

“தனது நண்பரை காப்பற்ற முயன்றபோது கடலில் அடித்துச்செல்லப்பட்டார்..” – காணாமல் போனவர் குறித்த தகவல்

குறிப்பாக, நவம்பர் மாதத்திற்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறைந்த கட்டணம் உள்ளிட்ட காரணங்களால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானச் சேவை சிங்கப்பூர் வாழ் தமிழர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

“இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு பணிபெண்களுக்கு கட்டுப்பிடியாகும் கட்டணம்” – ஏஜென்சிகளின் விளம்பரம்

விமான பயண அட்டவணை மற்றும் விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.com/ என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.