சிங்கப்பூர் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய இந்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

இரண்டு நாள் பயணமாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிங்கப்பூர் வருகை தந்துள்ளார்.

இந்த பயணத்தில், சாங்கி கடற்படைத் தளத்தில் உள்ள செம்பவாங் விமானத் தளத்தை ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.

இந்த சந்திப்பின் போது இந்தியா-சிங்கப்பூர் நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து சிங்கப்பூரில் உள்ள இந்திய வம்சாவளியினர் இடையே ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.

மேலும், கிளிஃபோர்ட் பியரில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி தகட்டில் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், சிங்கப்பூரின் கிராஞ்சியில் உள்ள போர் நினைவிடத்திற்கு சென்ற ராஜ்நாத் சிங், இரண்டாம் உலகப்போரின்போது உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்குள்ள பார்வையாளர் குறிப்பேட்டில், தனது கருத்தை பதிவிட்டு கையெழுத்திட்டார்.