டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் அவரது பயணத்திற்கு மத்திய அரசு தாமதமாக ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் டெல்லி முதல்வரான அரவிந்த் கேஜ்ரிவாலின் சிங்கப்பூர் பயணத்திற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசாங்கத்தின் தாமதமான ஒப்புதலுக்கு காரணம் என்ன என்று முதல்வர் கேள்வி எழுப்பினார்.அவர்,” நான் இந்திய தேசத்தின் சுதந்திர குடிமகன்,மேலும்,நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்,நான் குற்றவாளி அல்ல.நான் ஏன் தடுக்கப் படுகிறேன்? டெல்லி மாடலை முன்னிறுத்த சிங்கப்பூர் அரசாங்கம் என்னை பிரத்யேகமாக அழைத்தது” என்று கூறினார்.