சிங்கப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இதன் வீரியம் கொரோனா அளவுக்கு வீரியமாக இருக்காது என்றாலும், மக்கள் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெங்கிக் காய்ச்சலின் தன்மை வேறுபட்டு இருக்கும். அதனால் கொரோனா அளவுக்குப் பொதுச் சுகாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை இருக்காது.
சிங்கப்பூரில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே வரை 8,500க்கும் மேற்பட்டவர்கள் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்ற ஆண்டு முழுவதற்கும் கூட இந்த அளவுக்குப் பாதிப்பு பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெங்கிக் காய்ச்சல் சாதாரணமாக தெரிந்தாலும், கடுமையானது. ஆகையால் பாதிக்கப்பட்டவர்கள் வேலைக்குப் போக முடியாத சூழ்நிலை வரும். தங்கள் குடும்பங்களுக்கு மாற்று பராமரிப்பு ஏற்பாடுகளைக் செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம்.
டெங்கிக் காய்ச்சல் காரணமாக பொருளாதார பாதிப்பும் ஏற்படக்கூடும்.
டெங்கிக் காரணமாக ஆண்டுக்கு $100 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகை இழப்பு ஏற்படக்கூடும் என்பது அண்மையில் ஓர் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
வீட்டில் இடுக்கு முடுக்கான, இருட்டான இடங்களில் மருந்தடிக்க வேண்டும்.
டெங்கிக் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய கொசு புதிய உருமாறிய கிருமிகளை உருவாக்கக்கூடும்.
ஆகையால் எப்போதும் மக்கள் விழிப்புடன் இருந்து வரவேண்டும் என்று டாக்டர் டி ஆல்விஸ் வலி யுறுத்தினார்.