விடுமுறையில் சிறந்த அனுபவத்தைப் பெற வேண்டுமா? – படகில் பயணம் செய்து பாருங்கள்

singapore to desaru coast boat service Batamfast firm

சிங்கப்பூரிலிருந்து டேசாரு படகுச் சேவை எதிர்வரும் ஜூலை மாதம் 7-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.இந்த படகுச் சேவை தானா மேரா படகு முனையத்தையும் ஜோஹூரிலுள்ள டேசாரு படகு முனையத்தையும் இணைக்கிறது.

இதற்கான பயணச்சீட்டுகளின் கட்டணம் மற்றும் பயண நேரம் பற்றிய தகவல்களைப் பற்றிய விவரங்களை Desaru Coast இணையப்பக்கம் மற்றும் Batamfast east இணையப்பக்கம் ஆகியவற்றில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு இணையப்பக்கங்கள் மூலம் இம்மாத இறுதியிலிருந்து கட்டணச் சீட்டுகளை வாங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.வியாழக்கிழமையிலிருந்து ஞயிற்றுக்கிழமை வரை தினமும் ஒரு படகு டேசாரு சென்று அங்கிருந்து மீண்டும் சிங்கப்பூருக்கு திரும்பும்.இதனை நேற்று படகு நிறுவனங்கள் அறிக்கை மூலம் தெரிவத்தன.

சிங்கப்பூரிலிருந்து டேசாரு செல்ல ஒரு மணி நேரம் முப்பது நிமிடங்களாகும் என்று கூறப்படுகிறது.மேலும் ஆரம்பமாக படகில் 330 பேர் பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.டேசாரு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் ,கூடுதல் படகுச் சேவைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய படகுச்சேவை டேசாரு கடற்கரைக்கு மேலும் பல புதிய சர்வதேச பயணிகள் வந்து செல்ல வழி ஏற்படுத்தும்.விடுமுறையைச் செலவழிக்க நினைப்போருக்கு இந்த சர்வதேச பயணச் சேவை மிகுந்த பயனளிக்கும் அனுபவமாக அமையும் என்று Batam East நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.