செல்ல நாயைத் தேடும் ஜோடி! – பாதுகாப்பாக கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு காத்திருக்கும் வெகுமதி!

dog missing senkang
சிங்கப்பூரில் ஒரு தம்பதியினர் லுமியோ என்ற ஏழு மாத பாம்ஸ்கி நாயைத் தீவிரமாக தேடுகின்றனர்.நாயைக் கண்டுபிடித்து பாதுகாப்பாக சேர்ப்பவர்களுக்கு வெகுமதியாக S$1,000 ரொக்கத் தொகையை வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அக்டோபர் 1 ஆம் தேதி இரவு 9 மணியளவில் நார்த்ஷோர் டிரைவ்/லிங்கில் லுமியோ காணாமல் போனது.லுமியோவை ஜாகிங்கிற்கு வெளியே அழைத்துச் சென்றபோது,லுமியோவை கட்டி வைத்திருந்த காலரை உடைத்து சாலையின் குறுக்கே நாய் ஓடியது.
நாயின் உரிமையாளர் துரத்திப் பிடிக்க முயற்சி செய்த போது அங்கு லுமியோ தென்படவில்லை.
தொலைந்துபோன நாயைப் பற்றி NParks, விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு சங்கம் (SPCA) மற்றும் SOSD ஆகியவற்றில் தம்பதியினர் புகாரளித்தனர்.லுமியோவை கடைசியாக செங்காங் கிழக்கு சாலை/புங்கோல் வழியில் பார்த்ததாக தம்பதியரின் நண்பர் கூறினார்.

நண்பர் அளித்த தகவலின்படி அக்டோபர் 3-ஆம் தேதி புங்கோல் 24 வது அவென்யூவில் லுமியோ தென்பட்டது.ஆனால் உரிமையாளர்கள் விரைந்து சென்றும் நாயைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
எங்கேனும் லுமியோவைக் கண்டறிபவர்கள் உடனடியாக 9023 5072 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு அது சென்ற இடம் மற்றும் திசையைத் துல்லியமாகக் குறிப்பிடலாம் என்றும் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.