ஒன்பது காட்டு நாய்கள், தனியாக சிக்கிக்கொண்ட நீர்நாய் ஒன்றைச் சுற்றி வளைத்து அதை வேட்டையாட முயன்றது. இந்த காணொளி, சிங்கப்பூர் இணைய வட்டாரத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதை பார்த்த ஒருவர் அந்த விலங்குகள் கூட்டத்தின் அருகே கற்களை தண்ணீரில் வீசியதை அடுத்து நாய்கள் கலைந்து சென்றது.
கோவை-சிங்கப்பூர் இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம் – பயணிகள் மகிழ்ச்சி!
நேற்று ஜனவரி 2 அன்று மாலையில் @wxn0103 என்ற டிக்டாக் பயனரால் இந்த 45 வினாடிகள் கொண்ட காணொளி பதிவேற்றப்பட்டது.
அந்த ஒன்பது நாய்களும் நீர்நாயை சுற்றி வட்டமிடுவதும், அதை நோக்கி குரைப்பதும், பின்னர் பின்பக்கத்திலிருந்து கடிக்க முயற்சிப்பதும் காணொளியில் தெரிந்தன.
காணொளியின் முடிவில், கால்வாயில் நின்ற விலங்குகளுக்கு அருகில் ஒரு கல் வீசப்பட்டது, அதை கண்ட நாய்கள் சிதறி சென்றன.
இந்த சம்பவத்தை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகின்றனர், பலர் இதனை பகிர்ந்தும் உள்ளனர்.
பணத்தை காவலர்கள் திருடியதாக போலி நாடகம்: “வினேஷ் குமார் கணேசன்” என்பவருக்கு அபராதம், சிறை