வாழ்க்கையில் சில நேரங்களில் வெறுமையான உணர்வோ,வெறுப்போ அல்லது மனஉளைச்சலோ ஏற்படும்போது தொலைதூரப் பயணம் மேற்கொண்டால் மனம் மென்மையடைந்து அமைதியைப் பெற்றுவிடும்.தரைவழி,ஆகாயவழிப் பயணங்கள் இருந்தாலும்,கடல்வழிப் பயணம் தரக்கூடிய இன்பம் அலாதியானது.
அப்படி சொகுசுக் கப்பலில் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் இனி சிங்கப்பூரிலிருந்தோ மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்தோ புறப்படலாம்.’ரிசொட்ஸ் வேர்ல்ட் க்ருசெஸ் ‘ நிறுவனம் முதன்முறையாக கோலாலம்பூரிலிருந்து சொகுசுக் கப்பல் சேவைகளை வழங்கவிருப்பதால் இது சாத்தியமாகவுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 15-ஆம் தேதி முதல் ‘ரிசொட்ஸ் வேர்ல்ட் க்ருசெஸ்’ நிறுவனத்தின் ‘ஜென்டிங் ட்ரீம்’ சொகுசுக் கப்பல் சிங்கப்பூரிலிருந்து சேவைகளை மீண்டும் வழங்கத் தொடங்கியது.அதனையடுத்து இம்மாதம் 18-ஆம் தேதியிலிருந்து கோலாலம்பூரிலிருந்து சொகுசுக் கப்பல்கள் இயக்கப்படும்.
கோலாலம்பூரிலிருந்து சொகுசுக்கப்பல் சேவைகள் வழங்கப்படுவதன் மூலம் மலேசியாவின் கிள்ளான் துறைமுகத்திற்கு அருகே வசிக்கும் சுமார் 10 மில்லியன் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.