போதைப்பொருள் கடத்தல்: அதிகாரிகளின் அதிரடி சோதனையில் 5 பேர் கைது

drug 5 Singaporeans arrested
CNB

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான செயல்களில் ஈடுப்பட்டதாக 61 முதல் 65 வயதுக்குட்பட்ட 5 சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்த ஐந்து சந்தேக நபர்களில், நான்கு ஆண்கள் மற்றும் பெண் ஒருவரும் அடங்குவர் என்று மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் S$1,500 வரை ஊதியம் பெறும் சில “Work permit” பணியாட்கள் – அவர்களுக்கு மட்டும் என்ன சலுகை?

இந்த அதிரடி சோதனை நடவடிக்கையில் சுமார் 932 கிராம் ஹெராயின் மற்றும் 5 கிராம் ‘ஐஸ்’ வகை போதைபொருளும் கைப்பற்றப்பட்டது,

அதன் மொத்த மதிப்பு S$66,000 என்றும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் 61 வயதான சிங்கப்பூர் ஆடவர் தெம்பனீஸ் ஸ்ட்ரீட் 22க்கு அருகில் புதன்கிழமை (ஜன. 5) காலை கைது செய்யப்பட்டார்.

அதே நாளில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கையில், அதிகாரிகள் North Bridge சாலைக்கு அருகில் உள்ள குடியிருப்பு வீட்டில் சோதனை நடத்தினர்.

அந்த குடியிருப்பில், 63 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று சிங்கப்பூர் ஆண்களும், 65 வயதுப் பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூரில் வேலை செய்து வரும் மகன்கள்…கொலை செய்யப்பட்ட விவசாயி தந்தை – போலீசார் தீவிர விசாரணை