தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் சந்தேக குற்றவாளிகள் 93 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினால் (CNB) கடந்த பிப்ரவரி 27 முதல் மார்ச் 4 வரை நடத்தப்பட்ட சோதனையில் அவர் பிடிபட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது, 1,059 கிராம் ஹெராயின், 19 கிராம் ஐஸ் வகை போதைப்பொருள் உள்ளிட்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
அவைகளின் மொத்த மதிப்பு சுமார் S$78,000 என்று CNB செய்தி வெளியீட்டில் இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 4) தெரிவித்துள்ளது.
சோதனை நடந்தப்பட்ட பகுதிகளின் பெடோக், தெம்பனீஸ் மற்றும் தோ பாயோ ஆகியவை அடங்கும்.
சிகரெட் துண்டால் நேர்ந்த சேதம்… சிக்கிய ஊழியர் – சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்த கோர்ட்
அவர்கள் அனைவரிடமும் போதைப்பொருள் தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
சிங்கப்பூரில் 15 கிராமுக்கு மேல் ஹெராயின் (diamorphine) கடத்தினால் கட்டாய மரண தண்டனை எதிர்கொள்ள நேரிடும்.
சிங்கப்பூர் பயணிகளுக்கு இனி அனைத்தையும் இலகுவாக்கும் “MyICA” ஆப்: Visit pass-களையும் நீட்டிக்கலாம்!