துபாயில் இருந்து மதுரை வந்த பயணியிடமிருந்து 697 கிராம் தங்கம் பறிமுதல்!

Video Crop Image

துபாயில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த பயணியிடமிருந்து 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான 697 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் இந்திய அமைச்சர் தரிசனம்!

நேற்று (25/09/2022) காலை ஸ்பைஸ்ஜெட் விமானம் மூலம் 160 பயணிகள் துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்தனர். அதில், அவினாஷ் என்பவர் மறைத்து வைத்திருந்த 348 கிராம் எடைக் கொண்ட நிக்கல் பிளேட் கோட்டிங்குடன் கூடிய வட்ட வடிவிலான தங்க பொருளும், 349 கிராம் எடைக் கொண்ட அலுமினிய காப்பு போல தங்கப் பொருளும் சுங்கத்துறைப் புலனாய்வு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

அவர் எங்கிருந்து எதற்காக இங்கு தங்கத்தைக் கொண்டு வந்தார் என்று அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கப்பூரில் முதலீட்டாளர்கள், சிஇஓ-க்களை நேரில் சந்தித்த இந்திய அமைச்சர்!

குறிப்பாக, கடந்த சில தினங்களாக துபாய், ஷார்ஜா உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னை, கோவை, திருச்சி, மதுரைக்கு தங்கத்தைக் கடத்தி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பும் பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.