சாலைவிபத்தில் சிக்கி உயிரிழந்த பாதசாரி ஆடவர்

dunearn-road-fatal-accident/

சிங்கப்பூர்: டன்அர்ன் சாலை (Dunearn Road) மற்றும் ஷெல்போர்ட் சாலை (Shelford Road) சந்திப்பில் நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இது குறித்து கடந்த ஏப்ரல் 23, ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் 2:05 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் கொடுக்கப்பட்டது.

இதனை அடுத்து விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது துணை மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது.

இதில் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அதாவது ஒருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கும் (TTSH) மற்றும் இரண்டு பேர் KK பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கும் (KKH) கொண்டு செல்லப்பட்டனர்.

Tan Kah Kee MRT ரயில் நிலையத்திற்கு வெளியே விபத்து ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

இறந்தவர் பாதசாரி ஆடவர் என்று நம்பப்படுகிறது.