சைக்கிள் மூலம் சிங்கப்பூருக்கு வந்த டச்சு ஜோடி!

Photo: Changi Airport

 

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த டச்சு ஜோடியான (Dutch couple) ஆன்ட்ரி (Audrey) மற்றும் எலோய் (Eloy), உலகின் பல்வேறு நாடுகளை சைக்கிள் மூலம் சுற்றிப் பார்க்க முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2022- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அந்த ஜோடி சைக்கிள் பயணத்தைத் தொடங்கியது.

மிக விலையுயர்ந்த நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?- விரிவான தகவல்!

அதன்படி, துபாயில் இருந்து தாஷ்கண்டுக்கும், அல்மாட்டியில் இருந்து பாங்காங்- க்கும் விமானத்தில் பறந்த டச்சு ஜோடி, சுமார் 21 நாடுகளை சைக்கிளில் சுற்றுப் பார்த்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 19- ஆம் தேதி அன்று சிங்கப்பூருக்கு வந்த ஜோடி, மரினா பேவில் இருந்து சாங்கியில் உள்ள ஜுராசிக் மைலுக்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்டது.

அங்கு ஒரு கடையில் சூடாக டீ அருந்திவிட்டு, சாங்கி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற ஜோடி, பின்னர் விமானம் மூலம் லாட்வியாவுக்கு சென்றது. அதைத் தொடர்ந்து, அங்கிருந்து நெதர்லாந்து நாட்டுக்கு மீண்டும் சைக்கிள் மூலம் திரும்புகிறது டச்சு ஜோடி.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- ஆகஸ்ட் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

இதனிடையே, சைக்கிளில் வலம் வந்த டச்சு ஜோடிக்கு சிங்கப்பூரர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.