சிங்கப்பூரில் டிஜிட்டல் அன்பளிப்பு உறைகளின் விநியோகம் அமோகம்! – சுற்றுச்சூழலின் மீது மக்களுக்கு அக்கறை!

சிங்கப்பூரில் சில முன்னணி வங்கிகளில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு டிஜிட்டல் அன்பளிப்பு உறைகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மூன்று முன்னணி வங்கிகளில் E-hong bao எனும் மின்னியல் அன்பளிப்பு உறைகளின் பயன்பாடு கடந்த ஆண்டை விட 30 விழுக்காடு அதிகரித்துள்ளது. மேலும், இந்தாண்டு டிஜிட்டல் அன்பளிப்பு உறைகள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளன.

ஆகையால், புதிய பண நோட்டுகளைப் பெற நீண்ட நேரம் காத்திருக்கத் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம், சீனப் புத்தாண்டுக்கு எந்தச் சிவப்பு உறையை பயன்படுத்துவது என்ற குழப்பமும் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது. டிஜிட்டல் உறை மூலம் பணத்தைக் கொடுத்துவிடுவது நேரத்தை மிச்சப்படுத்துவதால் அதிகமானோர் நாடியுள்ளனர்.

வாடிக்கையாளர்கள் சுற்றுச்சூழல் மீது அக்கறை கொள்ளும் பொருட்டு காகிதங்களை வீணாக்காமல் டிஜிட்டல் உறைகளை நாடுவதாக வங்கிகள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், டிஜிட்டல் உறைகளின் விநியோகம் மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.