பொதுப் பேருந்தில் சென்ற இளைஞர் ஒருவர் கண்ட அருவருக்கத்தக்க சம்பவத்தை வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
டிக்டாக் பயனரான ஹக்கிமோரியோ என்ற அந்த இளைஞர், கடந்த ஜூன் 25 அன்று பொதுப் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது முதியவர் ஒருவர் தன்னைத் தொடுவது போன்ற வீடியோவையும் அவர் பதிவேற்றினார்.
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி ஆடவர் உட்பட மேலும் இருவருக்கு தூக்கு
ஏழு வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், பேருந்தின் பின்புறம்த்தில் உள்ள இருக்கைகளில் இருந்த முதியவர் சுயஇன்பத்தில் ஈடுபடும் காட்சிகள் அம்பலமானது.
இந்த சம்பவம் எப்போது எங்கு நடந்தது என்று தெரியவில்லை, அது குறித்து அவர் குறிப்பிடவும் இல்லை.
அவரின் அந்த வீடியோ டிக்டாக்கில் ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. நெட்டிசன்களிடமிருந்து சுமார் 30,000க்கும் மேற்பட்ட அருவருக்கத்தக்க கருத்துகளையும் அது பெற்றுள்ளது.
“நான் இனி பேருந்தின் பின் இருக்கையில் உட்கார மாட்டேன்” என்று ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார்.
வேறு சில பயனர்கள் இது குறித்து கூறுகையில்; அந்த முதியவரை தாங்கள் அடையாளம் கண்டுகொண்டதாகவும் மற்றவர்களுக்கு மிட்டாய் வழங்கும் பழக்கம் அவருக்கு இருப்பதாகவும் கூறினார்.
இதுபோன்ற அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம், இதற்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
வாட்ஸ்அப் மூலம் இந்த வேலையில் ஈடுபட்டால் தண்டனை உறுதி – சிக்கிய 22 பேர்