சிங்கப்பூரில் உள்ள குடும்பங்களுக்கு, 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணம், சராசரியாக 9.9 சதவீதம் அதிகரிக்கும்.
உக்ரைனில் நடந்த போரினால் ஏற்பட்ட அதிக ஆற்றல் செலவினங்களின் தாக்கம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்த அதிகரிப்பு முக்கியமாக உலகளாவிய எரிவாயு மற்றும் எண்ணெய் விலைகள் கணிசமாக உயர்ந்ததால் எழும் அதிக ஆற்றல் செலவு காரணமாகும்.
அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்களுக்கான சராசரி மாதாந்திர மின்சாரக் கட்டணம் $3.37 அதிகரிக்கும்.
முந்தைய காலாண்டில் $1.92 உயர்வுடன் ஒப்பிடும் போது, ஐந்து அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் $10.19 உயர்வைக் காண்பார்கள்.
ஏப்ரல் 1 முதல் ஜூன் 30, 2022 வரை சராசரியாக kWh ஒன்றுக்கு 2.49 சென்ட் மதிப்பில் திருத்தம் செய்யப்பட்டது.
சிங்கப்பூரின் மின்சாரத்தில் 95 சதவிகிதம் எண்ணெய் விலையின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
எரிசக்தி சந்தை ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஒவ்வொரு காலாண்டிலும் மின் கட்டணங்களை மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
அடுத்த காலாண்டில் கிலோவாட் மணிக்கு 25.44 முதல் 27.94 சென்ட் வரை அதிகரிக்கும். இது தொடர்ந்து ஐந்தாவது காலாண்டு அதிகரிப்பு ஆகும்.