சிங்கப்பூரில் வேலைசெய்து வந்த இந்தியப் பணிப்பெண் ஒருவர், முதலாளி வீட்டிலேயே ஊழியர் ஒருவருடன் உல்லாசமாக இருக்கும்போது சிக்கிக்கொண்டார்.
வீட்டில் யாரும் இல்லா நேரம் பார்த்து ஆடவரை அழைத்து வீட்டின் முக்க்கியமான அறையில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அந்நேரம் வீட்டுக்கு திரும்பிய முதலாளி ஷாலினி அவர்களை கையும் களவுமாக பிடித்து போலீசில் புகார் செய்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 11) பணிப்பெண்ணுக்கு விடுமுறை நாள் என்பதால் அவரை உறங்குமாறு சொல்லிவிட்டு ஷாலினி கோவிலுக்கு சென்றுள்ளார்.
பிழைக்க வந்த இடத்தில் வீண் வேலை – இந்தியருக்கு சிறை தண்டனை
அவரின் கணவருக்கு வீட்டில் தான் வேலை, அந்த நேரம் அவரும் வெளியில் அவசர வேலையாக சென்றுவிட்டார். அப்போது தனது காதலனை அழைத்த பணிப்பெண் அவருடன் முதலாளி வீட்டில் உல்லாசம் அனுபவித்துள்ளார்.
பிளாக் 107A கான்பெர்ரா ஸ்ட்ரீட்டில் உள்ள ஷாலினியின் நான்கு அறைகள் கொண்ட குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்தது. தனது கணவர் மற்றும் நான்கு வயது மகனுடன் ஷாலினி அங்கு வசித்து வருகிறார்.
பணிப்பெண் அங்கு மூன்று ஆண்டுகளாக வேலையில் இருப்பதாகவும், தனது சொந்த வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றும் ஷாலினி கூறினார்.
போலீசை கண்டு ஓட்டம் – டேசர் துப்பாக்கியுடன் வளைத்து பிடித்த போலீசார்: சிங்கப்பூரில் வைரலாகும் வீடியோ
ஷாலினி கூறியதாவது;
“நான் கோவிலில் இருந்து என் வீட்டிற்குள் நுழைந்தேன். என் படுக்கையறையின் கதவு மூடப்பட்டிருப்பதை நான் கவனித்தேன், அங்கிருந்து சில சத்தங்கள் வந்தன.”
“உடனே அங்கிருந்து என்னிடம் தமிழில் மன்னிப்பு கேட்டபடி பணிப்பெண் வெளியே வந்ததை கண்டு நான் திகைத்துப் போனேன். அதாவது ‘அக்கா, என்னை மன்னிச்சிருங்க, மன்னிச்சிருங்க..,’ என்று சொல்லிக்கொண்டே பணிப்பெண் செய்வதறியாது நின்றார்.”
“அறையில் வேறொருவர் இருப்பதை அறிந்த நான் உடனே சத்தம் போட்டேன். அறிமுகமில்லாத ஆடவர் ஒருவரை கண்டேன். பணிப்பெண் மீது நான் வைத்திருந்த நம்பிக்கை காரணமாக நான் மனமுடைந்து அழுதேன்”.
“அவர்கள் தப்ப கூடாது என்று நான் கதவைப் பிடித்துக் கொண்டேன். பின்னர் காவல்துறைக்கு புகார் செய்தேன், பணிப்பெண் செய்த துரோகம் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது.”
ஷாலினி இறுதியில் தனது கணவரை அழைத்து இதுபற்றி கூறினார்.
தன் குடும்பத்தில் ஒருத்தர் போல நடத்தி வந்துள்ளார்
ஷாலினிக்கு, இந்த சம்பவம் வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது, ஏனென்றால் பணிப்பெண்ணை தன் குடும்பத்தில் ஒருத்தர் போல ஷாலினி நடத்தி வந்துள்ளார். அவருக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை மற்றும் மாதச் சம்பளமாக S$700 கொடுத்துள்ளார் ஷாலினி.
பணிப்பெண்ணுக்கும் அந்த ஊழியருக்கு சில காலமாக பழக்கம் இருந்துள்ளது. “நான் அவர்களின் இருவரின் கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தேன், அதில் பாலியல் ரீதியாக செயல்படும் எண்ணற்ற வீடியோக்களை நான் பார்த்தேன் ” என்றார் ஷாலினி.
இறுதியாக “விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து, அதே நாளில் இரவு 8 மணிக்கு பணிப்பெண்ணை சொந்த நாட்டுக்கு அனுப்பினேன், அதற்கான செலவு மிக அதிகம் என்றாலும் அதைப் நான் பொருட்படுத்தவில்லை. அவளை இனி நான் பார்க்க விரும்பவில்லை என்று அவர் கூறி முடித்துக்கொண்டார்.