சென்னையில் உள்ள பிரபல மகளிர் கல்லூரியான எத்திராஜ் மகளிர் கல்லூரி (Ethiraj College) மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கொண்ட குழு சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அதன்படி, சிங்கப்பூரில் உள்ள செராங்கூன் சாலையில் அமைந்துள்ள சந்திர மஹால் உணவகத்தில் (Chandra Mahal Restaurant), லிட்டில் இந்திய கடைக்காரர்கள் மற்றும் இந்திய மரபுடைமை நிலையம் என்றழைக்கப்படும் ‘லிஷா’ (Lisha) அமைப்பின் நிர்வாகிகளை நேரில் சந்தித்துப் பேசினர்.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் விழா தொடங்கியது!
அப்போது, லிட்டில் இந்தியாவின் வர்த்தகம் உள்ளிட்டவைக் குறித்து லிஷா அமைப்பின் நிர்வாகிகள் உடன் கல்லூரி மாணவிகள் கலந்துரையாடினர். சந்திப்பு முடிவில், மாணவிகளுக்கு லிஷா அமைப்பின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.