பொது வெளியில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் தனது ஆணுறுப்பை வெளிக்காட்டிய வெளிநாட்டு ஆடவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டான் சென் செக் என்ற 37 வயதான அந்த ஆடவருக்கு 2 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கட்டட ஊழியர்களுக்கு செம்ம வாய்ப்பு… ஜூன் மாதம் முதல் பயிற்சி – சம்பளம் உயரலாம்
வேலைக்கு சென்றுகொண்டிருந்த டான், முதலாளியின் நாயுடன் சென்றுகொண்டிருந்த பெண்ணை நோக்கி தனது பேண்ட் ஜிப்பை இறக்கி உறுப்பை எடுத்து காட்டியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
31 வயதான பெண்ணிடம் தனது பிறப்புறுப்பை வேண்டுமென்றே வெளிப்படுத்திய குற்றத்தை டான் ஒப்புக்கொண்டார்.
இந்த சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து மலேசியரான அவருக்கு இரண்டு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
வேண்டுமென்றே அவரது பிறப்புறுப்பை வெளிப்படுத்தியதற்காக, 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
டிப்டாப் உடையில் பிச்சை எடுத்த வெளிநாட்டு பெண்கள் 4 பேர் கைது