ஃபேஸ்புக் நிறுவனம் Libra என்ற Cryptocurrency திட்டத்தை உலகளாவிய அளவில் வெளியிட்டுள்ளது.
எந்தவித குளறுபடிகளும் இல்லாமல் நிலையான மற்றும் உண்மையான பணத்தை கொண்டு சேர்ப்பதாக ஃபேஸ் புக் நிறுவனம் உறுதியளித்துள்ளது. மேலும், வங்கி கணக்கு இல்லா பல லட்ச மக்களை ஸ்மார்ட்போன் மூலம் ஒன்றிணைக்க போவதாகவும் அறிவித்துள்ளது.
நிதிநிலை மற்றும் இலாப நோக்கற்ற கூட்டாளிகளின் பிரதிநிதியாக இருந்து அவர்களின் புதிய முயற்சிகளை இந்த உலகளாவிய மிகப்பெரிய நெட்வொர்க் வாயிலாக இந்த Crypto- Money திட்டத்தை செயல்படுத்துவது முக்கிய நோக்காக கொண்டுள்ளது.
இந்த Crypto-currency திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ஃபேஸ்புக் ஒரு முக்கிய நிறுவனமாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் இந்த நாணய ஆதரவுடன் செயல்படும் அனைத்து நம்பகத்தன்மையான மத்திய வங்கிகளிலும் இந்த Libra திட்டத்தை வங்கி கணக்கு இல்லாமல் கூட அணுக முடியும்.