போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் சென்றுவந்த நபர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கினார்

தமிழ்நாடு: சிங்கப்பூருக்கு போலி பாஸ்போர்ட்டில் சென்று வந்த நபரை திருச்சி விமான நிலைய காவல் அதிகாரிகள் கைது செய்தனர்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று காலை 9 மணிக்கு வந்து சேர்ந்தது.

அப்போது, அந்த விமானத்தில் பயணம் செய்துவந்த சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் இளையாத்தங்குடி பகுதியை சேர்ந்த அழகப்பன் என்ற பயணி போலி பாஸ்போர்ட் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர், போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்று சிங்கப்பூர் சென்று வந்தது தெரியவந்தது.

அதனை அடுத்து, திருச்சி விமான நிலைய காவல் அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.