அப்பர் புக்கிட் திமாவில் உள்ள கால்வாயில் இறந்து கிடந்த 11 வயது இரட்டை ஆண் சிறுவர்களின் தந்தையை, நேற்று (ஜனவரி 27) காவல்துறையினர் மீண்டும் குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்றனர்.
Lianhe Zaobao வெளியிட்ட 4 நிமிட வீடியோ, கொலை குற்றாவளி என சந்தேகிக்கப்படும் ஆடவரை, கிரீன்ரிட்ஜ் கிரசண்ட் விளையாட்டு மைதானத்திற்கு அடுத்துள்ள கால்வாயில் பிற்பகல் 3:10 மணியளவில் காவல்துறை எவ்வாறு அழைத்துச் சென்றது என்பதைக் காட்டுகிறது.
கல்லாங் MRT அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்…போதைப்பொருள் அருந்தி தற்கொலை
48 வயதான சேவியர் யாப் ஜங் ஹவுன் என்ற அந்த ஆடவர், கடந்த ஜனவரி 21 அன்று மாலை 4.23 முதல் 6.25க்கு இடைப்பட்ட நேரத்தில் கிரீன்ரிட்ஜ் கிரசண்ட் விளையாட்டு மைதானத்தில் உள்ள கால்வாயில் யாப் இ செர்ன் ஈத்தன் என்ற மகனை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இன்னொரு சிறுவனின் கொலை குற்றச்சாட்டு பின்னர் விசாரணைக்கு வரும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
தன் சொந்த மகன்களையே கொலை செய்த தந்தை
ஆடவரை அழைத்து வருவதற்கு முன்பே, அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வீடியோ காட்சிகள்:
இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு அதிகரித்த வேலைவாய்ப்பு..!