9 வயது மகளை 54 வயது தந்தை சுமார் ஆறு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது.நீதிமன்றத்தில் ஆஜரான தந்தை அவரது மகளை விபச்சாரியாகச் சித்தரித்து குற்றம் சாட்டினார்.அவள் மற்ற ஆண்களுடன் பாலியல் ரீதியாக தொடர்பு கொண்டிருந்ததாகவும் கூறினார்.
அவரது குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டன.பாதிக்கப்பட்ட சிறுமியின் விபச்சாரத்திற்குக் காரணம் அவளது தந்தைதான் என்பது தற்காப்புக்கு தெளிவாகத் தெரிந்திருக்கும் என்று மாவட்ட நீதிபதி ஷைஃபுதின் சருவான் குறிப்பிட்டார்.
டிசம்பர் 16, வியாழன் அன்று அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு நான்கு ஆண்டுகள், 10 மாதங்கள் மற்றும் நான்கு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிறுமியின் அந்தரங்கப் பகுதிகளில் தொடுவது,உதட்டில் முத்தமிடுவது,மார்பகங்களைப் பிடிப்பது போன்ற செயல்களை மீண்டும் மீண்டும் செய்துள்ளார்.அவள் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவளது தந்தை இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தது.
பெற்றோர் திட்டியதால் கதவை பூட்ட முடியாமல் இரவு முழுவதும் கண்விழித்து, அப்பா வேலைக்குப் போயிருக்கிறார் என்று தெரிந்தவுடன் தான் தூங்கச் செல்வாள்.அவளுக்கு நேர்ந்த கொடுமையை வெளியே கூறினால் யாரும் நம்பமாட்டார்கள் என்று எண்ணி வேதனையுடனும் அவமானத்துடனும் அவதிப்பட்டிருக்கிறாள்.
இறுதியாக அவளது காதலனிடம் தனக்கு நேரும் பாலியல் கொடுமையை தெரிவித்தாள்.சிறுமியின் தந்தையாக,தந்தை-மகள் உறவை தனது சொந்த வக்கிரம் மற்றும் பாலியல் ஆசையால் இழிவுபடுத்தியுள்ளார்.