“15 வயது சிறுவனை பிப்.24 முதல் காணவில்லை”- தகவல் கொடுக்கும்படி சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

Photo: Singapore Police Force

சிங்கப்பூரில் வசித்து வந்த 15 வயதான ஜபேஸ் சிம் ஜூன் ஹோங்-கை (Jabez Sim Jun Hong), கடந்த பிப்ரவரி 24- ஆம் தேதி முதல் காணவில்லை. இந்த சிறுவன் கடைசியாக, பிப்ரவரி 24- ஆம் தேதி அன்று மதியம் 03.00 மணியளவில் பிளாக் 980சி புவாங்கோக் கிரெசென்ட் (Block 980C Buangkok Crescent) பகுதியில் காணப்பட்டுள்ளார்.

கல்லாங் ரிவரில் மிதந்தவரை கைது செய்த போலீஸ் – அதிகாரிகளுக்கு கட்டுப்பட மறுத்து அட்டகாசம்

சிறுவனை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தாலோ (அல்லது) சிறுவனை யாரேனும் பார்த்தாலோ உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையின் 1800-255-0000 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் (அல்லது) சிங்கப்பூர் காவல்துறையின் police.gov.sg/i-witness என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திலும் விவரத்தைச் சமர்ப்பிக்கலாம்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி… பேஸ்ட் வடிவ பொருளுடன் பிடிபட்ட ஊழியர்

தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும் என்று சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தெரிவித்துள்ளது.