2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் : டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் சிங்கபூருக்கு தங்கம் மற்றும் வெள்ளி !

Table Tennis

2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடந்த டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் 35 வயதான உலகத் தரவரிசையில் 16-வது இடத்தில் இருக்கும் ஃபெங் தியான்வீ, தனது சகநாட்டவரான உலகத் தரவரிசையில் 60வது இடத்தில் இருக்கும் 25 வயதான ஜெங் ஜியானை 4-3 என்ற கணக்கில் (6-11, 5-11, 8-11, 11-4, 11-6, 11-8, 11-) வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார். இதனால் சிங்கப்பூர் அணிக்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்தார் ஜெங். ஆரம்பத்தில் மூன்று செட்கள் முன்னிலயில் இருந்த ஜெங், ஃபெங்கின் அபாரமான ஆட்டத்தால் தோல்வியைத் தழுவினார்.

 

இரட்டையர் பிரிவிற்கு இணைந்த ஃபெங்  & ஜெங்

இந்த ஒற்றையர் ஆட்டத்திற்குப் பிறகு, பெண்கள் இரட்டையர் அரையிறுதிக்கு ஜோடி சேர்ந்த ஃபெங் மற்றும் ஜெங் ஜோடி, வெல்ஷ் ஜோடியான சார்லோட் கேரி மற்றும் அன்னா ஹர்சியையும் 3-2 என்ற கணக்கில் தோற்கடித்து சிங்கப்பூரை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளது. இறுதிப் போட்டியில் ஃபெங் மற்றும் ஜெங் ஜோடி ஆஸ்திரேலியாவின் ஜீ மின்ஹியுங் மற்றும் லே ஜியான் ஃபாங்கை சந்திக்க இருக்கிறது. இறுதிப் போட்டி ஆக., 8ம் தேதி, மாலை 4:30 மணிக்கு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.