COVID-19 தொற்று: சிங்கப்பூரில் ஐந்தாவது நபர் மரணம்..!

Fifth COVID-19 death recorded in Singapore
Fifth COVID-19 death recorded in Singapore

சிங்கப்பூரில் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) நிலவரப்படி, ஐந்தாவது COVID -19 நோயாளி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த அந்த நபர், 86 வயதான சிங்கப்பூர் பெண்மணி, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சமீபத்தில் பயணம் மேற்கொள்ளவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 49 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1.55 மணியளவில் தொற்று காரணமாக ஏற்பட்ட மருத்துவ சிக்கல்களால் அவர் உயிரிழந்தார் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

கடந்த மார்ச் 31 அன்று அந்தப் பெண்மணி தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தில் (NCID) அனுமதிக்கப்பட்டார், அதே நாளில் COVID-19 இருப்பது கண்டறியப்பட்டது என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும் அமைச்சகம், NCID அவரது குடும்பத்தினரை அணுகியுள்ளது, அவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: இந்தியாவில் உள்ள சிங்கப்பூரர்களை அழைத்துவர சிறப்பு விமானங்கள் ஏற்பாடு..!