பீப்பிள்ஸ் பார்க் வளாகத்திற்குப் பின்னால் உள்ள பார்க் கிரசென்ட் என்ற இடத்தில் பலர் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் அந்த சண்டையை, பொதுப் போக்குவரத்து பாதுகாப்புக் கட்டளை பிரிவு (TransCom) அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் 2 பெண்களை ஏமாற்றியதாக சிங்கப்பூர் போலீசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!
இந்த சண்டை கடந்த ஜூன் 12 அன்று இரவு 8.25 மணியளவில் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சைனாடவுனில் சீன ஆடவர்கள் சண்டையில் ஈடுப்பட்டதாக சீன மொழியில் தலைப்பிடப்பட்டு இந்த வீடியோ வலைத்தளங்களில் பரவ தொடங்கியது.
இதில் யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை மற்றும் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
முழுமையான விவரம் போலீசார் தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிழைப்புக்காக சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்கள், சடலமாக செல்லும் சோகம்… மேலும் ஒரு ஊழியர் மரணம்