சிங்கப்பூர் சமூக ஊடகங்களில் வழியே நேற்று புதன்கிழமை (ஜூலை 6) ஆண், பெண் இருவர் சண்டையிட்டு கொள்ளும் வீடியோ ஒன்று வைரலானது.
இதனை அடுத்து, பீச் ரோட்டில் அவர்களுக்கு இடையே நடந்த சண்டை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கப்பூரில் பணியில் இருந்த தமிழ் ஊழியர் மீது தாக்குதல் (Video) – வலுக்கும் கண்டனம்!
நேற்று காலை 9.08 மணியளவில் சம்பவம் குறித்து புகார் வந்ததாக Today கேள்விகளுக்கு பதிலளித்த போலீசார் தெரிவித்தனர்.
பெண் அந்த ஆடவரிடம் எதோ கூறுவது போல் தெரிகிறது, அவர் உடனே வாகனத்தை விட்டு இறங்கி வந்து பெண்ணை அடிக்கிறார்.
பிறகு, அந்த பெண் அவரின் காரை எட்டி உதைக்கிறார். பிறகு ஆடவர் பெண்ணை தள்ளி விடுகிறார். இப்படியே தொடர்ந்த இந்த சண்டை எதனால் ஏற்பட்டது என்று தெரியவில்லை.
இது குறித்து புகார் வந்ததை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டுமானம், கடல் துறைகளில் அதிரடி ஆய்வு… 50 க்கும் மேற்பட்ட வேலை நிறுத்த உத்தரவு