செர்ரி டிஸ்கோத்திக் இரவு நேர கேளிக்கை விடுதிக்குள் நுழைய, மது போதையில் இருந்த குழுவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, அதன் நுழைவாயிலில் சண்டை ஏற்பட்டது.
கடந்த மே 6, வெள்ளிக்கிழமை இரவு, அந்த குழுவினர் கேளிக்கை விடுதிக்குள் செல்ல வேண்டி வெளியே வரிசையில் நின்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.
சிங்கப்பூரில் அதிகரித்த கோவிட்-19 தொற்று விகிதம்… மீண்டும் கட்டுப்பாடுகளோ என்ற அச்சத்தில் ஊழியர்கள்!
Mothership வெளியிட்டுள்ள இந்த சம்பவத்தின் காணொளிகளில், அந்த ஆடவர்கள் குழு விடுதி பாதுகாப்பு ஊழியர்களை தாக்குவதைக் காட்டியது. அதில் இரண்டு ஆடவர்கள் தரையில் புரண்டு சண்டையிடுவதைக் காண முடிந்தது.
இது தொடர்பான மற்றொரு வீடியோ சண்டை நடப்பதை வேறு கோணத்தில் நமக்கு காட்டியது.
இதனை அடுத்து, சுமார் எட்டு முதல் 10 பேர் கொண்ட ஆடவர்களின் அந்த குழு, காவல்துறை வருகைக்கு முன்னதாகவே சம்பவ இடத்திலிருந்து வெளியேறியதாக அது கூறியுள்ளது.
All Credit: Mothership