புகை மண்டலமாகக் காட்சியளித்த குடியிருப்பு! – மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவர்!

சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் பகுதியில் உள்ள குடியிருப்புக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.புகை மண்டலமாக காட்சியளித்த கட்டடத்திலிருந்து சுமார் நூறு பேர் வெளியேற்றப்பட்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

உட்லண்ட்ஸ் தெரு 81-இல் பிளாக்- 806-இன் ஐந்தாவது தளத்திலுள்ள வீட்டில் தீ மூண்டது.தீ விபத்து குறித்து நேற்று நள்ளிரவு 2 மணியளவில் தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

புகை சூழ்ந்த பகுதியில் இருந்த இருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர்கள் கூ டெக் புவாட் (Khoo Teck Puat) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.நடைபயிற்சி செய்யும் மின் சாதனத்தில் இருந்து தீ பற்றியதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

பொதுமக்கள் தங்களது சாதனங்களை நீண்ட நேரம் மின்னூட்டம் செய்வதால் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதாகக் கூறப்படுகிறது.எனவே,மின்சாதனங்களை வெகுநேரம் மின்னூட்டம் செய்யவேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.