பாசிர் ரிஸ் பிளாட்டில் தீ: 20 பேர் வெளியேற்றம்

சிங்கப்பூர்: 198 பாசிர் ரிஸ் ஸ்ட்ரீட் 12 இல் உள்ள HDB பிளாட்டில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து அங்கிருந்து சுமார் 20 பேர் வெளியேற்றப்பட்டனர்.

நேற்று முன்தினம் செப்.10 அன்று இரவு 10.45 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் ஆங்கிலம் பேசத் தெரியாததற்காக சிறுவன் கொடுமை… போலீசில் புகார் செய்த தாய்

பிளாட்டின் 10வது மாடியில் உள்ள வீட்டின் படுக்கையறையில் தீ பற்றியதாக SCDF தெரிவித்துள்ளது.

தண்ணீரை பீச்சியடிக்கும் ஜெட் கருவியை பயன்படுத்தி தீயை அணைத்ததாக SCDF கூறியுள்ளது.

மேலும், சுமார் 20 பேர் SCDF இன் வருகைக்கு முன் சுயமாவே வெளியேறினர்.

இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூர் தமிழ் ஊழியர்களுக்கு நற்செய்தி… இனி ஒரு நிமிடத்தில் பணத்தை அனுப்ப முடியும்