ஜூரோங் ஈஸ்ட்டில் தீ விபத்து… பரிதாபமாக ஒருவர் உயிரிழப்பு

fire-jurong-east- death
SCDF

ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள HDB அடுக்குமாடி வீட்டில் இன்று ஆகஸ்ட் 16 அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பிளாக் 236 ஜூரோங் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 21ல் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து அதிகாலை 2:50 மணியளவில் தகவல் கொடுக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் (SCDF) பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

ஆர்ச்சர்ட் சாலையில் அடிதடி சண்டை – கலவரம் செய்ததாக 3 பேர் மீது குற்றச்சாட்டு

அதாவது அந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் உள்ள வீட்டில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததாக SCDF கூறியுள்ளது.

இறுதியாக மூன்று தண்ணீரைப் பாய்ச்சும் ஜெட் கருவி மூலம் தீ அணைக்கப்பட்டது.

அந்த வீட்டில் உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது, சோதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததும் உறுதி செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட வீட்டில் இருந்த ஒருவர் SCDF இன் வருகைக்கு முன் தானாக வெளியேறிவிட்டதாகவும் அது கூறியுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது.

சிங்கப்பூரில் உள்ள ஜப்பானிய உணவகத்தில் வேலை! – மனிதவளத்தை மேம்படுத்த புதிய திட்டம்