பிளாட் ஒன்றில் தீ விபத்து – 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!

fire at Punggol flat
Fire at Punggol flat (Photo: SCDF / FB)

புங்க்கோல் பிளாட் ஒன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டதால், அந்த பிளாக்கில் இருந்த 100 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) கூறுகையில், Blk 19 Punggol Field Walkஇன் 16 வது மாடியில் இரண்டு-மாடி பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூர் தங்க கட்டிகளை குறைந்த விலையில் வாங்கி தருவதாக கூறி.. 500 பவுன், ரூ.3 கோடி மோசடி!

சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படைக்கு இதுபற்றி முதலில் காலை 11:25 மணியளவில் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு வந்த SCDF அதிகாரிகள் சுவாசக் கருவிகளைக் கட்டிக்கொண்டு புகை மண்டலமாக இருந்த அறைக்குள் வலுகட்டாயமாக நுழைய வேண்டியிருந்தது.

அதற்குள், தீ படுக்கையறையை முழுவதுமாக பற்றிக்கொண்டது. இதில் செங்காங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் நீர் ஜெட் பயன்படுத்தி தீயை அணைத்தனர்.

அதனை அடுத்து, பிளாட்டில் இருந்த 6 பேரும் மீட்கப்பட்டனர். குடியிருப்பாளர்களில் 5 பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு (SGH) அனுப்பப்பட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட பிளாக்கில் சுமார் 100 குடியிருப்பாளர்கள் அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது.

ஜுவல் சாங்கி விமான நிலைய மேற்பரப்பு குழாயில் நீர் கசிவு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…