தீயை அணைக்க சென்ற வீரர் மயங்கி விழுந்த சோகம்

Firefighter unconscious after attending to Bukit Merah fire
SCDF

புக்கிட் மேராவில் உள்ள 91 ஹென்டர்சன் சாலையில் இன்று (டிச. 8) காலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது, இதில் தீயணைப்பு பணியில் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் ஒருவர் மயங்கி விழுந்தார்.

இன்று காலை 11:10 மணியளவில் தீ விபத்து குறித்து எச்சரிக்கை செய்தி வந்ததாக SCDF கூறியது.

நெருங்கும் ஆண்டு இறுதி.. எச்சரிக்கை விடுக்கும் சிங்கப்பூர்

அதாவது HDB பிளாக்கின் நான்காவது மாடியில் உள்ள வீட்டில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.

வீட்டுக்குள் தீயை அணைக்க SCDF தீயணைப்பு வீரர்கள் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்தனர். இந்த பாதுகாப்பு நடவடிக்கையின் போது, ​​தீயணைப்பு வீரர் ஒருவர் மயங்கி கீழே விழுந்தார்.

இதனை அடுத்து அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும், தீயணைக்கும் நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று SCDF கூறியது.

சிங்கப்பூரில் பணிபுரியும் இந்திய ஊழியர்களின் சாதனை: 100 பில்லியன் டாலர் ஹிட்!