சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு வந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.ஒரு நாளில் சுமார் 1,50,000 பயணிகளை விமான நிலையம் கையால்வதாகப் போக்குவரத்து அமைச்சர் S. ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஒரு வாரத்தில் ஏறக்குறைய மில்லியன் கணக்கானோர் விமான நிலையத்திற்கு வந்து செல்வதாகத் திரு.ஈஸ்வரன் அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.
கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு முந்தைய காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது சுமார் 75 சதவீதம் பயணிகள் வருகை அதிகரித்து இருப்பதாக அமைச்சர் கூறினார்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதிலிருந்து பயணிகளின் வருகைப் படிப்படியாக அதிகரித்தது.தற்போது அந்த எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக கூறினார்.