சிங்கப்பூரில் கிராப்ஃபுட் ஓட்டுநர் லாரியுடன் ஏற்பட்ட விபத்தில் பலி..!

42 வயதான கிராப்ஃபுட் டெலிவரி ஓட்டுநர் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) நேற்று லாரியுடன் சம்பந்தப்பட்ட விபத்தில் உயிரிழந்தார் என்று சிங்கப்பூர் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உட்லண்ட்ஸ் அவென்யூ 8க்குச் செல்லும் கம்பாஸ் அவென்யூவில் நடந்த இந்த விபத்து குறித்து காலை 11.50 மணியளவில் போலீசார் எச்சரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விபத்தில் சிக்கிய அந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் (SCDF) துணை மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது.

CNA கேள்விகளுக்கு பதிலளித்த கிராப், “உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆதரவையும், உதவிகளையும் வழங்கும்” என்று கூறியுள்ளது. மேலும், “விபத்து பற்றி அறிந்ததும் நாங்கள் மிகவும் வருத்தப்பட்டோம்” என்றும் கூறியுள்ளது.

“விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், மேலதிக கருத்தை எங்களால் வழங்க முடியவில்லை” என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source : CNA