ஆற்றின் நடுவில் வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகம் செய்த footpanda ஊழியர்

footpanda

ஆற்றின் நடுவில் வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகம் செய்த ஊழியர் குறித்து சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

கடந்த பிப்ரவரி 2ம் தேதி பேஸ்புக் பயனர் பிரதீத் சாங்டீ (Pradit Saengdee), ஃபுட்பாண்டா ஊழியர் வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகம் செய்ய ஆற்றைக் கடக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

தற்கொலை மிரட்டல் அழைப்பு.. உதவ சென்ற காவல்துறை அதிகாரிக்கு கத்தி குத்து – சந்தேக நபர் கைது

அந்த பதிவின் தலைப்பில் ஃபுட்பாண்டா இப்போது நீர்வழியிலும் விநியோகம் செய்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபுட்பாண்டா ஊழியர் இளஞ்சிவப்பு மற்றும் சாம்பல் நிற சீருடை அணிந்து, மோட்டார் படகு மூலம் சவாரி செய்வதை படத்தில் காணலாம்.

ஆற்றின் நடுவில் மீன்பிடித்து கொண்டிருக்கும் தனது வாடிக்கையாளருக்கு உணவு விநியோகம் செய்வதையும் படத்தில் காணமுடிகிறது.

ஊழியரின் தொழில் ஈடுபாடை நெட்டிசன்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

சிங்கப்பூரில் உரிமம் இல்லாமல் உணவு பொருட்களை கொண்டுவந்த வெளிநாட்டு பயணி சிக்கினார்!