சிங்கப்பூரில் 44 வயதுமிக்க வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு 18 ஆண்டுகள் தடுப்புக் காவல் மற்றும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டு அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாலியல் ரீதியாக மானபங்கம் செய்தது, அரசாங்க ஊழியராக ஆள்மாறாட்டம் செய்தது உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனக் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வீண் வேலையில் ஈடுபட்டு பிடிபட்ட 49 பேர்
ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்தில் ஒப்பந்தத் ஊழியராக பணிபுரிந்த மார்க் கலைவாணன் தமிழரசன் என்பவருக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வீட்டுப் பணிப்பெண் ஒருவரை அவரின் முதலாளி வீட்டில் வைத்தே கலைவாணன் பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டது.
இந்த சம்பவம் 2017 ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று நடந்தது குறிப்பிடத்தக்கது.
என்ன நடந்தது?
நீதிமன்ற ஆவணங்களின்படி, 2017 ஜூலை 14 அன்று இரவு கலைவாணன் மது அருந்தி இருந்துள்ளார், அப்போது போலீசார் ரவுடி கும்பல் ஒன்றை சோதனை செய்துகொண்டிருந்தனர்.
போலீசாரின் சோதனைகளைத் தவிர்ப்பதற்காக அவர் அருகிலுள்ள குடியிருப்பு கட்டிடத்திற்குச் சென்றுள்ளார். அங்கு, அவர் இந்தோனேசிய வீட்டு பணிப்பெண் ஒருவரின் படுக்கையறை ஜன்னலைத் திறந்து, அவரை எழுப்பினார்.
தாம் ஒரு இமிக்ரேஷன் அதிகாரி என கூறி, பணிப்பெண்ணின் பாஸ்போர்ட் மற்றும் ஒர்க் பெர்மிட் அனுமதியை சரிபார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
பணிப்பெண் தன் முதலாளியை அழைத்து இது பற்றி கூற, முதலாளி கலைவாணனிடம் அடையாளத்திற்கு ID கேட்டுள்ளார்.
ஆனால் கலைவாணன் எதையும் காட்டாமல் சிறிது நேரத்தில் அங்கிருந்து வெளியேறினார்.
பின்னர் கலைவாணன் ஒரு தளம் கீழே இறங்கி நேரடியாக பிளாட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு முன்பக்க கதவு பூட்டப்படாமல் இருந்ததால், பிளாட்டுக்குள் நேரடியாக நுழைந்த அவர், வீட்டுப் பணிப்பெண் தனது அறையில் துணிகளை இஸ்திரி செய்து கொண்டிருந்ததைக் கண்டார்.
தன்னை போலீஸ் என்று அடையாளப்படுத்திக்கொண்ட கலைவாணன், பணிப்பெண்ணிடம் பாஸ்போர்ட், வேலை அனுமதி, பணம் ஆகியவற்றைக் கேட்டுள்ளார்.
முதலாளி வீட்டில் இல்லை என்பதை அறிந்தத கலைவாணன், பணிப்பெண்ணின் போனை பறித்து அலமாரியில் வைத்துள்ளார்.
பின்னர் கலைவாணன் பணிப்பெண்ணை மிரட்டி தகாத முறையில் மானபங்கம் செய்துள்ளார்.
பணிப்பெண் உதவி கோரி அலறல் சத்தம் எழுப்பியதைக் கேட்டதும், ஃப்ளாட்டுக்கு வெளியே தங்கி இருந்த போலீஸை அழைத்தார் முதலாளி.
பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிளாட்டுக்குள் நுழைந்தபோது, பணிப்பெண் ஒரு போலீஸ்காரரின் காலை பிடித்துக்கொண்டு உதவி கோரி அழுதார்.
அதன் பின்னர் கலைவாணன் குளியலறையில் இருந்து முற்றிலும் நிர்வாணமாக வெளியே வந்தார்.
போலீசாருக்கு பணிய மறுத்து அவர் ஓட்டம் பிடிக்க முயன்றபோது, போலீசார் அவரை பலவந்தமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்