“வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர்..” – தற்போது ஒருவருக்கு தாக்கு: போலீஸ் தலையீடு

Indian charged for duping insurers for foreign workers injury claims

மேக்பெர்சன் பகுதியில் 20 வயது வெளிநாட்டு துப்புரவு ஊழியரை 62 வயதுமிக்க ஆடவர் ஒருவர் தாக்கியதாக கூறப்பட்டது.

அதற்கு முன்பாக மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியருக்கு அந்த ஆடவர் தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனை நாடாளுமன்ற உறுப்பினர் (MP) டின் பெய் லிங் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் பிளாக் 88 சர்க்யூட் சாலையில் நடந்த சம்பவம் தொடர்பாக உதவி வேண்டி அழைப்பு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

62 வயதுடைய அந்த ஆடவர் மட்டுமே இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.

பங்ளாதேஷை சேர்ந்த அந்த துப்புரவு ஊழியர் தாக்கப்பட்டது குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன.