சாங்கி விமான நிலையத்தில் தேவையில்லாமல் வாய்விட்டு மாட்டிக்கொண்டு வெளிநாட்டு ஊழியருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தனது லக்கேஜில் வெடிபொருட்கள் இருப்பதாக கேலி செய்த 28 வயதான அவருக்கு S$2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி சாங்கி விமான நிலைய முனையம் 1 (T1) இல் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நகருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நந்ததுள்ளது.
தான்சானியா நாட்டைச் சேர்ந்த உமர் அப்துல்ரஹ்மான் அஜீஸ், என்ற அவர் கேலி செய்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி 25, அன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.