சிங்கப்பூரில் தூங்கிக்கொண்டிருந்த பெண் ஒருவரை தூக்கி சென்று நாசம் செய்த வெளிநாட்டு ஊழியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கெயிலாங்கில் பகுதியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அந்த பெண் ஒரு பாலியல் தொழிலாளி என சொல்லப்பட்டுள்ளது. முதலில் அப்பெண்ணை அவர் மானபங்கம் செய்ததாக கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த இருவர்… பாஸ்போர்ட் தர மறுப்பு – ஏன் இந்த வேலை?
பின்னர் அவரை அங்கிருந்து அருகில் உள்ள பகுதிக்கு கொண்டு சென்ற வெளிநாட்டு ஊழியர் பெண்ணிடம் உடலுறவு வைத்துக்கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
40 வயதுமிக்க பாட்டியன் சோஹாக் என்ற வங்காளதேச ஊழியரான அவர் இந்த குற்றத்தில் ஈடுபட்டார் என அப்பெண் போலீசில் புகார் கொடுக்க, 3 நாள் கழித்து ஊழியர் கைது செய்யப்பட்டார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட ஊழியருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு வருந்திய காரணத்தால் தண்டனை குறைக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
மரினா பே சாண்ட்ஸ் ஷாப்பிங் மாலுக்கு வெளியே நடந்த கொடூரம்: துப்பாக்கி சுட்டு பலியான போலீஸ் அதிகாரி