வெளிநாட்டு ஊழியர்களுக்கு செம்ம சான்ஸ் – இப்போதே சேர்ந்து பயனடையுங்கள்

Job hire more foreign workers School bus operators spore
(Photo: Overseas Foreign Workers in Singapore/FB)

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மன உளைச்சலை போக்கும் வகையில் புதிய ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

அனுபவம் வாய்ந்த பயிற்றுவிப்பாளர்களை கொண்டு துவாஸில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக சுமார் 200 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

இவர்களுக்கான பயிற்சி 6 மாத திட்டத்தின்கீழ், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடத்தப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

இதில் கலந்துகொள்ளும் ஊழியர்களுக்கு சீருடை, விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஏற்பாட்டை சிங்கப்பூர் ரோட்டரி சங்கம் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான அமைப்பும் செய்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.