துவாஸில் பெண் ஒருவரை சீரழித்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு ஆண்கள் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவர்கள் 30 வயதான அகமது ரெய்ஹான் மற்றும் 36 வயதான ஆலம் ஃபோய்சல் என்றும் கூறப்பட்டுள்ளது, இருவரும் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்கள் என தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.
அவர்கள், வியாழக்கிழமை (மார்ச் 10) அன்று காணொளி இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
என்ன நடந்தது ?
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7.25 மணியளவில் 32 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் சுயநினைவுடன் பயனியர் சாலையில் காணப்பட்டதை அடுத்து, உதவி வேண்டி அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில், அந்த பெண்ணுக்கு தலை மற்றும் உடலில் காயங்கள் பல இருந்ததாக போலீசார் கூறினர். பின்னர் சுயநினைவுடன் இருந்த அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், காயங்கள் அடைப்படையில் அவர் பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
அதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவீர விசாரணைகள் மூலமாகவும், போலீஸ் கேமராக்கள் உதவியுடனும், புகார் பதிவு செய்யப்பட்ட 12 மணி நேரத்திற்குள் அந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணை
முதற்கட்ட விசாரணையில் இரு ஆண்களும் அந்த பெண்ணை முன்னர் அறியாதவர்கள் என தெரியவந்துள்ளது.
அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை பயனியர் சாலையில் கொண்டு வந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
வழக்கு ஒத்திவைப்பு
இரண்டு ஆடவர்களும் மத்திய போலீஸ் பிரிவு சிறையில் அடைக்கப்படுவார்கள் என வியாழன் அன்று கூறப்பட்டது.
மேலும், அவர்களின் வழக்குகள் மார்ச் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சீரழிப்பு குற்றம் நிரூபிக்கப்பட்டால், இருவருக்கும் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.
வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் இனி இதெல்லாம் “கட்டாயம்” – அதிரடி அறிவிப்பு