வெளிநாட்டினர், சிங்கப்பூர் தகுதிவாய்ந்த ஓட்டுநர் உரிமங்களை வரும் திங்கள்கிழமை முதல் புதுப்பிக்கவும் மற்றும் மாற்றவும் முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது வரை, சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் மட்டுமே ஆன்லைனில் அவ்வாறு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் www.police.gov.sg/e-services அல்லது the Police@SG மொபைல் செயலி மூலம் தங்கள் SingPass கணக்குகளைப் பயன்படுத்தி வெளிநாட்டினர் தங்கள் ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிக்கவும், மாற்றவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
SingPass கணக்குகள் இல்லாதவர்கள் தங்கள் வெளிநாட்டு அடையாள எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தலாம்.
தகுதிவாய்ந்த ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிக்க அல்லது மாற்றுவதற்கான கூடுதல் விண்ணப்பங்களை போக்குவரத்து காவல்துறை இனி ஏற்றுக்கொள்ளாது என்றும் கூறியுள்ளது.
மேலும், பொதுமக்கள் கூடுதல் தகவல்களை பெற www.police.gov.sg என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.